search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்கள் சேர்க்கை"

    • நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
    • இந்த தகவலை விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சாத்தூர் தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022-23 -ம் கல்வியாண்டில் பகுதி நேர நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் பயிற்சிக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சியில் உலோகவியல், உலோகத்தின் பயன்பாடு, தங்கத்தைப் பற்றிய விவரம், தங்கத்தினை உரசியும், உரசாமலும் தரம் அறியும் முறை, வங்கிகளில் நகைக்கடன் வழங்கும் முறை, ஹால்மார்க் முத்திரை, அடகு பிடிப்போர் நடைமுறைச் சட்டம் மற்றும் விதிகள் போன்ற பாடங்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    பயிற்சியின் முடிவில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம தேர்வு நடத்தி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய ஏதுவாக சான்றிதழ் வழங்கப்படும். இந்த பயிற்சியினை முடித்தவர்கள் தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றவும், அடகு மற்றும் ஆபரணக் கடை மற்றும் நகை வணிகம் செய்யவும் வாய்ப்புகள் உள்ளன.

    இந்த பயிற்சியில் பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களும் பயிலும் வகையில் இந்த பயிற்சியானது சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.

    பயிற்சியின் கால அளவு 100 மணி நேரம் (10 வாரம்) பயிற்சியில் சேருவதற்கு குறைந்தபட்ச கல்வி தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது வரம்பு இல்லை. ஆண், பெண் இருபாலரும் பயிற்சியில் சேரலாம். பயிற்சி கட்டணம் ரூ.4 ஆயிரத்து 543 ஆகும். பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ.500 மதிப்புள்ள கிட் பாக்ஸ் (நகை மதிப்பீட்டு பெட்டி) இலவசமாக வழங்கப்படும்.மேலும் விவரங்களுக்கு முதல்வர் தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை நிலையம், சிவசக்தி திருமண மண்டபம். எஸ்.ஆர்.நாயுடு நகர், பி.ஆர்.சி. டிப்பே எதிர்புறம், சாத்தூர் என்ற முகவரியிலோ அல்லது 04562-260293, 88071 59088 என்ற கைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாளை தொடங்குகிறது
    • கல்லூரி முதல்வர் அறிவிப்பு

    குடியாத்தம்:

    குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் 2022-2023 கல்வியாண்டிற்கான முதுநிலை தமிழ், ஆங்கிலம், பொருளியல், வரலாறு, வணிகவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.

    மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி முதல்வர் கோ.கிருஷ்ணன் செய்தி குறிப்பின் மூலம் தெரிவித்துள்ளார்.

    • விருத்தாசலம் அரசு செராமிக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.
    • இந்த கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு எந்த விதமான அறிவிப்பு இன்றி சேர்க்கை நிறுத்தப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தமிழக அரசு செராமிக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு எந்த விதமான அறிவிப்பு இன்றி சேர்க்கை நிறுத்தப்பட்டது.இது குறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் அக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சேர்க்கை நடைபெறாததை கண்டித்து விருத்தாசலம் பாலக்கரையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் பற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் உடனடியாக செராமிக் கல்லூரிக்கு சென்று கல்லூரி முதல்வர் திருமுருகனிடம் முதலாமாண்டு சேர்க்கை குறித்து விவரங்களை கேட்டறிந்தார்.

    அப்போது கல்லூரி முதல்வர் இந்த கல்லூரி முன்னர் வணிகவரித்துறை நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டதாகவும், இந்தாண்டு முதல் உயர்கல்வித்துறை நிர்வாகத்தின் கீழ் மாறிவிட்டதாக தெரிவித்தார், அதனால்தான் மாணவர் சேர்க்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும், அனுமதி கிடைத்தவுடன் உடனடியாக சேர்க்கை தொடங்கப்படும் என தெரிவித்தார். இதனை கேட்ட சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் உடனடியாக தொழில்துறை கூடுதல் இயக்குனரை தொடர்பு கொண்டு பேசினார்.அப்பொழுது சேர்க்கையை உடனடியாக தொடங்குவதாக எம்.எல்.ஏ விடம் உறுதி அளித்த கூடுதல் இயக்குனர், மாணவர்களுக்கு சேர்க்கை விண்ணப்பங்களை வழங்குமாறு கல்லூரி முதல்வருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து விருத்தாசலம் செராமிக் கல்லூரியில் இந்த ஆண்டிற்கான சேர்க்கை விண்ணப்பங்கள் உடனடியாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு சேர்க்கை தொடங்கியது.

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விடுதிகளில் தங்கி கல்வி பயில விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • விடுதிகளில் சேருவதற்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டகலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்நல அலுவலரின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் 23 பள்ளி விடுதிகள், 2 தொழில்நுட்ப கல்வி விடுதிகள் மற்றும் 1 கல்லூரி விடுதி ஆகிய விடுதிகளுக்கான புதிய மாணவ, மாணவியர்சேர்க்கை தேர்வுக்குழு மூலம் நடைபெற உள்ளது. மேலும் பள்ளி விடுதிகளில் 4- ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளும், கல்லூரி, பாலிடெக்னிக் விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு பாலிடெக்னிக் மாணவர், மாணவிகளும் விடுதிகளில் தங்கி பயில எவ்வித செலவினமும் இல்லாமல், அனைத்து விடுதி மாணவ,மாணவிகளுக்கு உணவு, தங்கும் வசதி அளிக்கப்படும். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும்சிறப்பு வழிகாட்டி கையேடுகளும் வழங்கப்படும்.

    விடுதிகளில் சேருவதற்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து படிக்கும் நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ தூரத்துக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதிமாணவிகளுக்கு பொருந்தாது. ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத்தமிழர்களின்குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு விடுதியிலும் மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்களை க்எக்காலத்திலும் எந்த நேரத்திலும் எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் சேர்த்துக்கொள்ளவும் அவர்களது படிப்பு முடியும் வரை விடுதிகளில் தங்கிப் பயிலவும் அனுமதிக்கலாம்.

    எனவே விடுதியில் தங்கி பயில விருப்பமுள்ள மாணவ, மாணவியர்கள் தங்கள்பயிலும் கல்வி நிலையங்களின் அருகில் உள்ள விடுதி காப்பாளரிடம்வி ண்ணப்பங்களை பெற்று தங்களின் உறுதிமொழி படிவம், பெற்றோர் அல்லது பாதுகாவலர் அளிக்கும் உறுதிமொழி படிவம் ஆகியவைகளை பூர்த்தி செய்து தங்கள் பயிலும் கல்வி நிலைய தலைவரிடம் கையொப்பம் பெற்று பள்ளி விடுதி மாணவர்கள் வருகின்ற 06.07.2022-க்குள்மற்றும் கல்லூரி விடுதி மாணவர்கள் 31.08.2022- க்குள் விடுதி காப்பாளரிடம்அல்லது மாவட்டகலெக்டர் வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்சி றுபான்மையினர் நல அலுவலகத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்பிக்கலாம்.

    மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விடுதிகளில் தங்கி கல்வி பயில விண்ணப்பிக்கலாம் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தகவல் வெளியிட்டுள்ளார்.
    • விடுதிகளில் சேருவதற்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்நல அலுவலரின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் 23 பள்ளி விடுதிகள், 2 தொழில்நுட்ப கல்வி விடுதிகள் மற்றும் 1 கல்லூரி விடுதி ஆகிய விடுதிகளுக்கான புதிய மாணவ, மாணவியர்சேர்க்கை தேர்வுக்குழு மூலம் நடைபெற உள்ளது.

    மேலும் பள்ளி விடுதிகளில் 4- ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளும், கல்லூரி, பாலிடெக்னிக் விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு பாலிடெக்னிக் மாணவர், மாணவிகளும் விடுதிகளில் தங்கி பயில எவ்வித செலவினமும் இல்லாமல், அனைத்து விடுதி மாணவ,மாணவிகளுக்கு உணவு, தங்கும் வசதி அளிக்கப்படும். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும்சிறப்பு வழிகாட்டி கையேடுகளும் வழங்கப்படும்.

    விடுதிகளில் சேருவதற்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து படிக்கும் நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ தூரத்துக்கு மேல் இருக்க வேண்டும்.

    இந்த தூர விதிமாணவிகளுக்கு பொருந்தாது. ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத்தமிழர்களின்குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு விடுதியிலும் மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்களைக்எக்காலத்திலும் எந்த நேரத்திலும் எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் சேர்த்துக்கொள்ளவும் அவர்களது படிப்பு முடியும் வரை விடுதிகளில் தங்கிப் பயிலவும் அனுமதிக்கலாம்.

    எனவே விடுதியில் தங்கி பயில விருப்பமுள்ள மாணவ, மாணவியர்கள் தங்கள்பயிலும் கல்வி நிலையங்களின் அருகில் உள்ள விடுதி காப்பாளரிடம்விண்ணப்பங்களை பெற்று தங்களின் உறுதிமொழி படிவம், பெற்றோர் அல்லது பாதுகாவலர் அளிக்கும் உறுதிமொழி படிவம் ஆகியவைகளை பூர்த்தி செய்து தங்கள் பயிலும் கல்வி நிலைய தலைவரிடம் கையொப்பம் பெற்று பள்ளி விடுதி மாணவர்கள் வருகின்ற 06.07.2022-க்குள்மற்றும் கல்லூரி விடுதி மாணவர்கள் 31.08.2022- க்குள் விடுதி காப்பாளரிடம்அல்லது மாவட்டகலெக்டர் வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்சி றுபான்மையினர் நல அலுவலகத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்பிக்கலாம்.

    மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×